நாடு முழுக்க என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபட

சொல்லியிருக்கும் நிலையில், அமல்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பு வந்தால்தான் அது பற்றி யோசிக்கவே செய்வாரா அமைச்சர்? அதுவும் சட்டத்துறை அமைச்சர் என்ற கேள்வி இயல்பாக பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. இதையொட்டி சமூக வலைதளங்களிலும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) அவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் முதல் குரலாக அதிமுக எதிர்க்கும்’ என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது...